ஒரு சாமானியனின் கவிதைகள்
Wednesday 19 June, 2013
Monday 17 June, 2013
தேவதைகளின் தேவதை
என் கனவுகளில் வரும் தேவதைகள்
அவைகளின் கனவுகளில் 'நீ' தேவதையாய்
வருவதாய் பேசிக் கொள்கின்றன...
நீ தேவதைகளின் தேவதை......
-க.பொன்னியின் செல்வன்.....
அவைகளின் கனவுகளில் 'நீ' தேவதையாய்
வருவதாய் பேசிக் கொள்கின்றன...
நீ தேவதைகளின் தேவதை......
-க.பொன்னியின் செல்வன்.....
Sunday 3 February, 2013
மிதவாதம்.
என் மூளையை யாரோ மூளைச்சலவை செய்கின்றார்கள்....
எனது மூளை அதை மூளை என்று அறிந்து கொள்ளும் முன்னரே....
நான் என்னை நான் என்று அறியும் முன்னரே அவனுள் ஒருவனாக்கப் படுகிறேன்...
மிதவாதம் கற்றுத் தராத எங்கள் கடவுள், அவனுள் ஒருவனாக்கப் பட்ட எனக்கு , தீவிரவாதம் கற்றுத் தர பணிக்கப்படுகிறார்...
எது பாவம், எது புண்ணியம் என்று பிரிக்கும் முன்னரே எல்லாம் பிரிந்து விடுகிறது....
நிராசையாக்கப்பட்ட என் ஆசைகளை மறந்து, பிறரின் ஆசையை நிராசையாய் மாற்ற பணிக்கப்பட்டு இருக்கிறேன்
புனிதத்தின் பெயரால் பாவம் செய்யும் புண்ணியவான் நான்....
நான் நானில்லை , அவனுள் ஒருவனாக்கபட்டவன்.....
எல்லாம் முடிந்து , ஒரு நாள் நான் நரகம் சென்றேன்....
எனக்கு சொர்க்கம் தான் கொடுக்க வேண்டும் என எங்கள் கடவுள் ஆணையிட்டாராம்....
அதிர்ச்சியடைந்து நான் அவரைக் காண சென்றேன்....ஆச்சர்யமாய் அவர் மிதவாதம் போதித்துக் கொண்டு இருந்தார்...
இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.....
பேசுவதற்கும், செய்வதற்கும் நிறைய இருக்கிறது இனி........
- க.பொன்னியின் செல்வன்
எனது மூளை அதை மூளை என்று அறிந்து கொள்ளும் முன்னரே....
நான் என்னை நான் என்று அறியும் முன்னரே அவனுள் ஒருவனாக்கப் படுகிறேன்...
மிதவாதம் கற்றுத் தராத எங்கள் கடவுள், அவனுள் ஒருவனாக்கப் பட்ட எனக்கு , தீவிரவாதம் கற்றுத் தர பணிக்கப்படுகிறார்...
எது பாவம், எது புண்ணியம் என்று பிரிக்கும் முன்னரே எல்லாம் பிரிந்து விடுகிறது....
நிராசையாக்கப்பட்ட என் ஆசைகளை மறந்து, பிறரின் ஆசையை நிராசையாய் மாற்ற பணிக்கப்பட்டு இருக்கிறேன்
புனிதத்தின் பெயரால் பாவம் செய்யும் புண்ணியவான் நான்....
நான் நானில்லை , அவனுள் ஒருவனாக்கபட்டவன்.....
எல்லாம் முடிந்து , ஒரு நாள் நான் நரகம் சென்றேன்....
எனக்கு சொர்க்கம் தான் கொடுக்க வேண்டும் என எங்கள் கடவுள் ஆணையிட்டாராம்....
அதிர்ச்சியடைந்து நான் அவரைக் காண சென்றேன்....ஆச்சர்யமாய் அவர் மிதவாதம் போதித்துக் கொண்டு இருந்தார்...
இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.....
பேசுவதற்கும், செய்வதற்கும் நிறைய இருக்கிறது இனி........
- க.பொன்னியின் செல்வன்
Saturday 12 January, 2013
பிரிவின் நிமித்தம்
பிரிவின் நிமித்தம் , இனி வேறொன்றும் சாத்தியமாகி விடப் போவதில்லை.
அரை நிமிடத்தில் குறுஞ்செய்திகளுக்கு பதில் கிடைத்ததன் விந்தை என்னவோ
இப்பொழுது யுகமானாலும் பதில் கிடைப்பதில்லை.
உன் அலைப் பேசி எண்ணை மனனம் செய்தது என் தவறில்லை என்றாலும்,
பிரிவின் நிமித்தம் அது தவறாகவே படுகிறது..
அலைப்பேசியையும், எண்ணையும் எத்தனை முறை மாற்றினாலும்
உன் எண் மட்டும் அழிவதே இல்லை மனத்தில் இருந்து.....
மனனம் செய்வது என் தவறில்லை என்றாலும்,
பிரிவின் நிமித்தம் அது தவறாகவே படுகின்றது....
"பொய்யான" பொய்களின் மூலம் உன் மறுப்பையும், இருப்பையும் நீ நினைவுப்படுத்தத் தான் செய்கிறாய்.
பிரிவின் நிமித்தம் நான் மறக்க வேண்டியது, மனனம் செய்த உன் எண்ணே தவிர , நம் நினைவுகள் அல்ல....
அவைகளும் காலப்போக்கில் மறைந்து விடும் என்ற நம்பிக்கையை திடமாய் விதைக்கிறாய்....
பிரிவும் வலி, பிரிவின் நிமித்தமும் வலி...
-------க. பொன்னியின் செல்வன்....
அரை நிமிடத்தில் குறுஞ்செய்திகளுக்கு பதில் கிடைத்ததன் விந்தை என்னவோ
இப்பொழுது யுகமானாலும் பதில் கிடைப்பதில்லை.
உன் அலைப் பேசி எண்ணை மனனம் செய்தது என் தவறில்லை என்றாலும்,
பிரிவின் நிமித்தம் அது தவறாகவே படுகிறது..
அலைப்பேசியையும், எண்ணையும் எத்தனை முறை மாற்றினாலும்
உன் எண் மட்டும் அழிவதே இல்லை மனத்தில் இருந்து.....
மனனம் செய்வது என் தவறில்லை என்றாலும்,
பிரிவின் நிமித்தம் அது தவறாகவே படுகின்றது....
"பொய்யான" பொய்களின் மூலம் உன் மறுப்பையும், இருப்பையும் நீ நினைவுப்படுத்தத் தான் செய்கிறாய்.
பிரிவின் நிமித்தம் நான் மறக்க வேண்டியது, மனனம் செய்த உன் எண்ணே தவிர , நம் நினைவுகள் அல்ல....
அவைகளும் காலப்போக்கில் மறைந்து விடும் என்ற நம்பிக்கையை திடமாய் விதைக்கிறாய்....
பிரிவும் வலி, பிரிவின் நிமித்தமும் வலி...
-------க. பொன்னியின் செல்வன்....
Tuesday 27 December, 2011
ஆயுசு
ஆயுசுக் காலம் மிக மிகக் குறைவு என்றாலும்,
வெளியே வரும் பொழுது.....
மிக மிக மகிழ்ச்சியாக , சற்றே பெரியதாக வருகின்றன
முட்டைகள்!!!!!
துணிகள் துவைக்கும் பொழுது....
வெளியே வரும் பொழுது.....
மிக மிக மகிழ்ச்சியாக , சற்றே பெரியதாக வருகின்றன
முட்டைகள்!!!!!
துணிகள் துவைக்கும் பொழுது....
Monday 24 October, 2011
நான் இப்பொழுது....
பொறுப்புகளை ஏற்று கொண்டு செயல்பட மிகவும்... ஆசைப் படுகிறேன்....
கண் முன்னே பொறுப்புகளை பிறர் தட்டி கழிப்பதால்.....
கற்று கொண்டே இருக்க பிரியப்படுகிறேன்....
இல்லாவிடில் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறேன் என்ற பயத்துடன்...
சம்பவங்கள் பல கண்டு சபதங்கள் மேற்கொள்கிறேன் ....
சடுதியில் மறந்து.....துணிந்தவனுக்கு துக்கம் இல்லை என்று காற்றில் பறக்க விடுகிறேன்....
மாறாமல் இருக்க ஆசைப்பட்டு , மாறிக் கொண்டே இருக்கிறேன்.....
பொன்னியின் செல்வனை நினைத்து, கர்வமும் அடைந்து கொள்கிறேன்....
எது எப்படியோ, நான் இப்போது இப்படித்தான்.....
------பொன்னியின் செல்வன் க.
கண் முன்னே பொறுப்புகளை பிறர் தட்டி கழிப்பதால்.....
கற்று கொண்டே இருக்க பிரியப்படுகிறேன்....
இல்லாவிடில் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறேன் என்ற பயத்துடன்...
சம்பவங்கள் பல கண்டு சபதங்கள் மேற்கொள்கிறேன் ....
சடுதியில் மறந்து.....துணிந்தவனுக்கு துக்கம் இல்லை என்று காற்றில் பறக்க விடுகிறேன்....
மாறாமல் இருக்க ஆசைப்பட்டு , மாறிக் கொண்டே இருக்கிறேன்.....
பொன்னியின் செல்வனை நினைத்து, கர்வமும் அடைந்து கொள்கிறேன்....
எது எப்படியோ, நான் இப்போது இப்படித்தான்.....
------பொன்னியின் செல்வன் க.
Monday 10 October, 2011
மீண்டும் ஒரு முறை..
முழுவதுமாய் கடந்து செல்லும் மணித்துளிகள்
உன்னை நினைவு படுத்த தயங்குவதில்லை....
முன்னொரு காலத்தில் , என் அனுமதியோடும்....
என் அனுமதி இல்லாமலும்...நம் மணித்துளிகளை ஆட்கொண்ட நீ....
இப்பொழுது உன் நினைவுகளை கொண்டு ஆக்கிரமிக்கிறாய்......
நீ ஒரு புரியாத புதிராய் என்னை விட்டு விலகினாய்....
ஒரு நாள் உன்னை நினைக்காமல் இருப்பது என்பது....
"வரையறுக்கவே முடியாத அறிவியல் கேள்விகள் போல"
ஒரு நம்பிக்கையுடனே உன்னை இப்போதும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்...
நீ என்றாவது ஒரு நாள் என்னை உன் நினைவுகளில் கடந்து செல்வாய் என்று....
Subscribe to:
Posts (Atom)