முழுவதுமாய் கடந்து செல்லும் மணித்துளிகள்
உன்னை நினைவு படுத்த தயங்குவதில்லை....
முன்னொரு காலத்தில் , என் அனுமதியோடும்....
என் அனுமதி இல்லாமலும்...நம் மணித்துளிகளை ஆட்கொண்ட நீ....
இப்பொழுது உன் நினைவுகளை கொண்டு ஆக்கிரமிக்கிறாய்......
நீ ஒரு புரியாத புதிராய் என்னை விட்டு விலகினாய்....
ஒரு நாள் உன்னை நினைக்காமல் இருப்பது என்பது....
"வரையறுக்கவே முடியாத அறிவியல் கேள்விகள் போல"
ஒரு நம்பிக்கையுடனே உன்னை இப்போதும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்...
நீ என்றாவது ஒரு நாள் என்னை உன் நினைவுகளில் கடந்து செல்வாய் என்று....
No comments:
Post a Comment