Saturday 12 January, 2013

பிரிவின் நிமித்தம்

பிரிவின் நிமித்தம் , இனி வேறொன்றும்  சாத்தியமாகி விடப் போவதில்லை.

அரை நிமிடத்தில்  குறுஞ்செய்திகளுக்கு பதில் கிடைத்ததன்  விந்தை என்னவோ

இப்பொழுது யுகமானாலும் பதில் கிடைப்பதில்லை.

உன் அலைப் பேசி எண்ணை  மனனம்  செய்தது என் தவறில்லை என்றாலும்,

பிரிவின் நிமித்தம் அது தவறாகவே படுகிறது..

அலைப்பேசியையும், எண்ணையும் எத்தனை முறை மாற்றினாலும்

உன் எண்  மட்டும் அழிவதே இல்லை மனத்தில் இருந்து.....

மனனம் செய்வது என் தவறில்லை என்றாலும்,

பிரிவின் நிமித்தம் அது தவறாகவே படுகின்றது....

"பொய்யான" பொய்களின் மூலம்  உன் மறுப்பையும், இருப்பையும் நீ நினைவுப்படுத்தத் தான் செய்கிறாய்.

பிரிவின் நிமித்தம் நான் மறக்க வேண்டியது, மனனம் செய்த உன் எண்ணே  தவிர , நம் நினைவுகள் அல்ல....

அவைகளும் காலப்போக்கில் மறைந்து விடும் என்ற நம்பிக்கையை திடமாய் விதைக்கிறாய்....

பிரிவும் வலி, பிரிவின் நிமித்தமும் வலி...

                                                                                  -------க. பொன்னியின் செல்வன்....
   

No comments:

Post a Comment