Sunday 3 February, 2013

மிதவாதம்.

என் மூளையை யாரோ மூளைச்சலவை செய்கின்றார்கள்....

எனது மூளை அதை மூளை என்று அறிந்து கொள்ளும் முன்னரே....

நான் என்னை நான் என்று அறியும் முன்னரே அவனுள் ஒருவனாக்கப் படுகிறேன்...

மிதவாதம் கற்றுத் தராத எங்கள் கடவுள், அவனுள் ஒருவனாக்கப் பட்ட எனக்கு , தீவிரவாதம் கற்றுத் தர பணிக்கப்படுகிறார்...

எது பாவம், எது புண்ணியம் என்று பிரிக்கும் முன்னரே எல்லாம் பிரிந்து விடுகிறது....

நிராசையாக்கப்பட்ட என் ஆசைகளை மறந்து, பிறரின் ஆசையை நிராசையாய் மாற்ற பணிக்கப்பட்டு இருக்கிறேன்

புனிதத்தின் பெயரால் பாவம் செய்யும் புண்ணியவான் நான்....

நான் நானில்லை , அவனுள் ஒருவனாக்கபட்டவன்.....

எல்லாம் முடிந்து , ஒரு நாள் நான் நரகம் சென்றேன்....

எனக்கு சொர்க்கம் தான் கொடுக்க வேண்டும் என எங்கள் கடவுள் ஆணையிட்டாராம்....

அதிர்ச்சியடைந்து நான் அவரைக் காண சென்றேன்....ஆச்சர்யமாய் அவர் மிதவாதம் போதித்துக் கொண்டு இருந்தார்...

இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.....

பேசுவதற்கும், செய்வதற்கும் நிறைய இருக்கிறது இனி........

- க.பொன்னியின் செல்வன்

No comments:

Post a Comment