நாங்கள் போராளிகளும் இல்லை.
உங்களுக்கு சுதந்திரம் வாங்கியவர்களும் இல்லை..
எங்களின் விடுதலைக்கும் போராடிய மகான்கள் இல்லை.
உங்களைப் போல நாங்களும் ,
எங்களைப் போல நீங்களும் ஒருநாளும் இருந்தது இல்லை...
புரிந்து கொள்ள முடியாத வாழ்வின்
மகத்துவம் அறிந்தவர்கள் நாங்களே...
ஆனால் ஒரு காலத்தில் இவைகள் எல்லாவற்றையும் ,
நாங்கள் கடந்தோம், அல்லது அவைகள் எங்களைக் கடந்தன..
காரணம் சொல்லக் கோடி கதைகள் எங்கள் வசம்..
யாருடையோ விருப்பத்திற்கோ, நாங்கள் விருப்பமில்லாமல்
செய்த தியாகம் இன்றைய எங்களின் எதார்த்தம் ..
உங்கள் திரைப்பட மொழியில் கூறுவது என்றால்
எங்களின் வாழ்வு எதார்த்தம் மீறாதது.
ஆம் கோடிக் கதைகள் உண்டு.
ஆனால் கேட்பதற்கு நேரம் இல்லை உங்களுக்கு...
நீங்கள் எது எதற்கோ மண் சோறு உண்பவர்கள்...
மீண்டும் சொல்கிறேன் நீங்களும், நாங்களும் வேறு...
இறுதியாய் ஒரு விண்ணப்பம்.
பரிந்துரைக் குழுக்கள் அமைக்காமலே நீங்கள் எங்களுக்கு தரலாம்
"தியாகச் சிகரங்கள்" பட்டம்..
இல்லை , நாங்களே வைத்துக் கொள்கிறோம் ....
---------சாமானியன்
No comments:
Post a Comment