Wednesday 18 May, 2011

நிரந்தரம் இல்லா பிரிவுகள்..


எப்படி புரிய வைப்பேன்  இந்த பொல்லாத மனதுக்கு...
என்றும் என் பேச்சை கேட்பதில்லை

இன்று மட்டும் என்ன கேட்டு விடவா  
போகிறது...!!!

உனக்காக நான் என்னை இழந்து உன் நட்பினை 
பெற்றேன்...

உண்மைகள் அதிகம் பேசுகிறேன் என்று உண்மையான 
பொய்கள் சொன்னேன்..

வெட்கம் இல்லாமல் காத்து இருப்பதற்கு ஆயிரம் சமாதானங்கள் 
சொல்லிக் கொண்டேன் .

இதோ இன்றும் வெட்கம் இல்லாமல் இரவு பொழுதுகளை அடமானம் 
வைத்து காத்து இருக்கின்றேன். 

ஆனாலும், புரிபடவே இல்லை சில புதிர்கள்..

நான் நானாகத் தான் இருந்தேன், நீயாக என்று மாறினேனோ 
அன்றிலிருந்து அடமானம் வைக்கப்பட்டது.
அனைத்தும்...

எவை என்று கேட்டு விடாதே.. எல்லாம் என்று என்னால் 
பதில் அளிக்க இயலாது..

என்னிடம் சொல்லிக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் 
இருந்தும், 

சொல்லாமல் மறைப்பதில் சுகம் அதிகம் என உணர்ந்தேன் .


பிரிவதற்கு நேரம் தயாராகத் தான் உள்ளது...

இருவரின் நினைவுகளைச் சேர்த்து வைத்து , பிரிவோம்...

                                                  - பொன்னியின்செல்வன்  க.

1 comment:

  1. அருமை... நல்லா எழுதறீங்க..


    //உண்மைகள் அதிகம் பேசுகிறேன் என்று உண்மையான
    பொய்கள் சொன்னேன்..//
    super..
    தொடருங்கள்...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete