Friday 10 June, 2011

அரளி விதை

உனக்கு நான் என்றாவது  தவறு 
        இழைத்து இருக்கின்றேனா ?.....

உன் அடிப்படை உரிமைகள் 
        என்னால் பறிக்கப்பட்டனவா....?

நீ மோட்சத்திற்கு செல்லும் வழி 
        என்னால் அடைக்கப்பட்டு விட்டதாய் எண்ணுகிறாயா ?

உன்னிடம் நான் என்றாவது வரவு செலவு பார்த்து இருக்கின்றேனா

என் உதிரம் பார்த்து நீ ஒதுங்கி போகிறாய் 

நினைவில் வைத்துக்கொள் , 

நீ என் உதிரத்தில் இருந்து தான் வந்தாய் என்று !!!!!!!

என்னைப் போல உன்னை அந்த கண்ணனும் காத்தது இல்லை.

இன்று நீயோ சிவனை விட வேகமாய் இருக்கிறாய்..

அன்றே சொன்னால் என் மாமியாள்

இவனுடைய முகம் சரி இல்லை..

அரளி கொடுத்து விடு என்று...

நான் கண்ணைக் காட்டிலும் உன்னைக் காத்தேன்.

இறுதியாக ஒரு விண்ணப்பம் , 

அரளி வேண்டும்.....!!!!!




No comments:

Post a Comment